Tuesday, August 10, 2010
மேலப்பாளையத்தில் பெண்கள் பயான்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் நகரக் கிளையின் சார்பாக பெண்கள் பயான் கடந்த 08.08.2010 ஞாயிறு அன்று அஸர் தொழுகைக்குப் பின் 4:30 மணி முதல் மஃரிப் வரை மேலப்பாளையம் 29வது வார்டில் நடைபெற்றது.இதில் அல்-இர்ஷாத் இஸ்லாமிய கல்லூரிமாணவிகள் இணை வைப்பு ஓர் நிரந்தர நரகமே, என்ற தலைப்பிலும் ரமலானின் சிறப்பும் நோன்பின் சட்டங்களும் என்ற தலைப்பிலும் உரையாற்றினர்.பின்னர் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சுமார் 75 பெண்கள் கலந்துக் கொண்டனர். இந்த சத்தியப் பிரச்சாரம் மக்களுக்கு சென்றடையும் வண்ணம் வீட்டிற்கு வெளியே ஒலிபெருக்கி ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மேலப்பாளையம் 29வது வார்டு கிளை நிர்வாகிகள் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
(அல்ஹம்தில்லாஹ்) எல்லா புகழும் இறைவனுக்கே!. TNTJ
No comments:
Post a Comment