Tuesday, August 10, 2010

WOMAN'S BAYAN IN MPM

Tuesday, August 10, 2010


மேலப்பாளையத்தில் பெண்கள் பயான்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் நகரக் கிளையின் சார்பாக பெண்கள் பயான் கடந்த 08.08.2010 ஞாயிறு அன்று அஸர் தொழுகைக்குப் பின் 4:30 மணி முதல் மஃரிப் வரை மேலப்பாளையம் 29வது வார்டில் நடைபெற்றது.இதில் அல்-இர்ஷாத் இஸ்லாமிய கல்லூரிமாணவிகள் இணை வைப்பு ஓர் நிரந்தர நரகமே, என்ற தலைப்பிலும் ரமலானின் சிறப்பும் நோன்பின் சட்டங்களும் என்ற தலைப்பிலும் உரையாற்றினர்.பின்னர் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சுமார் 75 பெண்கள் கலந்துக் கொண்டனர். இந்த சத்தியப் பிரச்சாரம் மக்களுக்கு சென்றடையும் வண்ணம் வீட்டிற்கு வெளியே ஒலிபெருக்கி ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மேலப்பாளையம் 29வது வார்டு கிளை நிர்வாகிகள் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.



(அல்ஹம்தில்லாஹ்) எல்லா புகழும் இறைவனுக்கே!. TNTJ

QURAN TAFSIR CLASS IN MELAPALAYAM

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் கடந்த 08.08.2010 ஞாயிறு அன்று மஃரிப் தொழுகைக்குப் பின் மஸ்ஜீதூர்ரஹ்மான் பள்ளியில் வாரந்திர திருக்குர்ஆன் விளக்கவுரை நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் ஏரளமானோர் கலந்துக் கொணடனர்.இந்நிகழ்ச்சியில் மேலண்மைக் குழுத் தலைவர் சகோ. ஷம்சுல் லூஹா ரஹ்மானி அவர்கள் உரையாற்றினார்கள்.இதில் 17 பனூ இஸ்ராயீல் (அல் இஸ்ராஃ) என்ற அத்தியாயத்தில் இறுதி பகுதி குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த திருக்குர்ஆன் விளக்கவுரை இன்ஷா அல்லாஹ் ரமலானுக்குப் பின் நடைபெறும். TNTJ

Tuesday, August 3, 2010

DARBIYA PROGRAMME FOR MPM STUDENT


Tuesday, August 03, 2010


மேலப்பாளையத்தில் மாணவர்களுக்கான தர்பியா!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் கடந்த 25-7-2010 அன்று மாணவர்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடத்தியது.
இந்த தர்பியா நிகழ்ச்சி மேலப்பாளையத்தில் காட்டு புது தெரு, ஆசுரா தெரு மற்றும் மூலன் அஹ்மத் பிள்ளை தெரு ஆகிய மூன்று இடங்களில் நடைபெற்றது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் சார்பாக நடத்தப்பட்ட இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்

Monday, August 2, 2010

ASSALAMU ALAIKUM

WE ARE VERY HAPPY TO  INTRODUCE A SITE FOR OUR BELOVED MELAPALAYAM TNTJ.